ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைவு.

May 21, 2020
மாத்தளை நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள்20 பேர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டுள்ளனர.

மொட்டுக் கட்சியின் லக்கல பிரதேச வேட்பாளர் திலக் பண்டாரவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ள அவர்கள்,  நாவுலயிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று, வெற்றிலை கொடுத்து கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவும் அதனைக் கருத்திற்கொண்டுடே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this

Related Posts

Previous
Next Post »